வெள்ளவத்தை சைவ மங்கையா் வித்தியாலயத்தின் மாணவிகள் தலைவிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாணவத்தலைவிகள் தினம் ' hope' கல்லுாாி மண்டபத்தில் மாணவத் தலைவி நீலாதக்சி பிரியாதக்ஸன் தலைமையில் (05) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை கிறிக்கற் கழகத்தின் முன்னாள் தலைவா் அரவிந்த டி சில்வா கலந்து கொண்டாா். கௌரவ அதிதியாக சிறைச்சாலைகள் , புனருத்தாபன அமைச்சின் மேலதிகச் செயலாளா் ரஞ்சனி நடராஜாப்பிள்ளை , கல்லுாாி அதிபா் அருந்ததி ராஜவிஜயன், கல்லுாாியின் முகாமைத்துவ முகாமையாளா் மாலா சபாரத்திணம் மற்றும் ஆசிரியைகள் ஏனைய பாடசாலைகளின் மாணவத்தலைவிகள் குழாமும் கலந்து கொண்டனா்.
.இந் நிகழ்வில் மாணவிகளது சமூக நல உதவித் திட்டங்கள், ஹோப் எனும் ஆங்கில சஞ்சிகை வெளியீடு, இயற்கை புகைப்படப் போட்டி நிகழ்வுகள். பரதநாட்டியம்.இசை ,பாடல்கள் , ஏனைய பாடசாலைகளுக்கிடையே நடாத்திய சமூக நாடகங்கள், குருந்திறைப்படம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவத் தலைவிகளுக்கு அதிதிகளினால் பரிசும் வழங்கப்பட்டது. அத்துடன் மாணவத் தலைவிகள் தலைமைத்துவத்தினை எவ்வாறு நிர்வகித்தல், ஒழுக்கம், விளையாட்டு, கல்வி சமூக சேவை போன்ற தலைப்பில் பிரதம அதிதி அரவிந்த டி சில்வா அங்கு உரையாற்றினாா்.
0 comments :
Post a Comment