அரசு ஆதரவை துண்டித்துக்கொள்ள 20 ஆதரவு முஸ்லிம் எம்பீக்கள் முடிவு ?



நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இத் தருணத்தில் - 20 இற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் எம்பீக்கள் - அரசுக்கு வழங்கிவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் நிலையிலுள்ள அரசாங்கம் - தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொள்ள 7 முஸ்லிம் எம்பீக்களின் ஆதரவை கோரியுள்ளது.
பசில் ராஜபக்ஷ உட்பட அரசின் சிரேஷ்ட தலைவர்கள் நேற்று முதல் முஸ்லிம் எம்பீக்களை தொடர்பு கொண்டு ஆதரவை கோரியபோதிலும் - அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றே அறிய முடிகின்றது.
20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்களின் கைகளிலேயே தற்போது அரசின் இருப்பு தங்கியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :