NFGGயின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக்கொடியினை NFGGயின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஏற்றி வைத்தார்.
NFGGயின் காத்தான்குடி காரியாலய முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் Dr.KM.ஸாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக NFGGயின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், காத்தான்குடி பொலீஸ் நிலைய போக்குவரத்து பொலீஸ் பொறுப்பதிகாரி , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இணைப்பாளர் AM.மாஹிர் JP, SJB கட்சியின் பிரதேச இணைப்பாளர் சகோதரர் முஸ்தபா,மௌலவி MHM.புஹாரி பலாஹி, புத்தாக்க சாதனையாளர் சகோதரர் முனீர், NFGGயின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், தலைமைத்துவ சபை உறுப்பினர்கள்,செயற்குழு உறுப்பினர்கள்,மகளிர் பிரிவு உறுப்பினர்கள், உயர்தர மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வில் புத்தாக்க சிந்தனையாளரும் தகவல் தொழில்நுட்பத்துறையில் இளம்சாதனையாளருமான சகோதரர் முனீர் அவர்களைக் கௌரவித்து நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது. அத்துடன் உயர்கல்வியினைத்
தொடர்வதில் பொருளாதார ரீதியில் இடர்படுகின்ற 50மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டு, NFGGயின் இவ்வருடத்திற்கான இலவச அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment