மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான பஸ் சேவை ஆரம்பம்



க.கிஷாந்தன்-
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையும் ஆரம்பமானது.

இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான பஸ் சேவை இடம்பெற்றது.

நுவரெலியா - கொழும்பு, பதுளை - கொழும்பு, கம்பளை - கொழும்பு, பூண்டுலோயா - கொழும்பு, கண்டி - பதுளை, ஹட்டன் - இரத்தினபுரி உட்பட மேலும் பல பஸ் சேவைகள் இடம்பெற்றன.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார நடைமுறையை மீறும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :