அரச சேவைகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு, விரைவில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி (J.J. Ratnasiri) தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களில் பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவைகளில் 58,000 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள், இதுவரை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்காகவே, இத்தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயிலுனர் பட்டதாரிகளை, அரச சேவைகளில் நிரந்தரமாக நியமிப்பதற்கு, அமைச்சரவை அண்மையில் தீர்மானித்ததாகவும், அதற்கமைய அவர்களுக்கு துரிதமாக நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment