நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் சுகாதார வழி காட்டல்களுக்கு அமைவாக, க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில், நவம்பர் 1 ஆம் திகதி புதிய சுகாதார வழி காட்டல்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல், ஆசன எண்ணிக்கையில் 50 வீதமான மாணவர்களை உள்ளடக்கியவாறு, பிரத்தியேக வகுப்புக்களை முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment