நவம்பர் 16 முதல் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி



மினுவாங்கொடை நிருபர்-
வம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் சுகாதார வழி காட்டல்களுக்கு அமைவாக, க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில், நவம்பர் 1 ஆம் திகதி புதிய சுகாதார வழி காட்டல்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல், ஆசன எண்ணிக்கையில் 50 வீதமான மாணவர்களை உள்ளடக்கியவாறு, பிரத்தியேக வகுப்புக்களை முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :