நிந்தவூரில் உதயமானது நிகழ்நிலை இலவச கல்வி செயற்திட்டம் !



மாளிகைக்காடு நிருபர்-
நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டினால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய முக்கிய பாடங்கள் மற்றும் பரீட்சையை மையமாகக் கொண்டு இலவசமாக கற்பிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா இவ் வேலைத்திட்டத்திற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கியதுடன் அதற்கான பல உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.

"றிஸ்லி முஸ்தபா கல்வி நிதியம்" திட்டம் மூலமாக இப் பங்களிப்பு நடைபெற்றது. இதன் போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு டெப் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிராந்திய முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :