யாழில் இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் முன்னெடுப்பு



யாழ் லக்சன்-
கொவிட் தடுப்பு செயலணி தலைவரும் இராணுவத்தளபதியுமான சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் இராணுவ மருத்துவ பிரிவினரின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று யாழ். மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இராணுவத்தில் 512 ஆவது பிரிகேட் பிரிவுக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே நாடு பூராகவும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக யாழ். மாநகரசபையை உள்ளடக்கி குறித்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :