கல்முனை கல்வி வலயத்தில் தேசிய பாடசாலையாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு உத்தியோபூர்வ கடிதம் கையளிப்பு!



எம். என். எம். அப்ராஸ்-
ல்முனை கல்வி வலயத்தினுள் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் உத்தியோபூர்வ நிகழ்வு இன்று (20) கல்முனை வலயக்கல்வி அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன

பெரமுனவின்கல்முனை தொகுதி முக்கியஸ்தகரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபைஉறுப்பினர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசிய பாடசாலைக்கானஉத்தியோபூர்வ கடிதங்ககளை பாடசாலை அதிபர்களிடம் கையளித்தார்.
கல்முனை வலய கல்வி அலுவல பிரிவில் 09 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் விசேட அதிதியாக காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் ஜாஹிர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியு .டி
வீரசிங்கவின் இணைப்பாளர்களான எம். எம்.ஜெளபர், எ. எல். மீராஸாஹிப், எஸ்.வினோத், எஸ்.எம். ஜெஸில், டி.ஹிருஸ்னராச் றிஸ்லி முஸ்தபாவின்செயலாளர் எ. எல் .ஜவாஹிர் மற்றும் கல்முனை கல்வி வலய கணக்காளர் வை . எம். ஹபிபுல்லா, பொறியலாளர் எ. எம் .சாஹிர் பிரதி கல்விப் பணிப்பாளர்களான திருமதி
ஜெயந்திமாலா , திருமதி ஆலிப் உட்பட தெரிவு செய்யப்பட்ட
கல்முனை வலய அதிபர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :