நந்தவனப்பிள்ளையாரின் ஆடிஅமாவாசை திருவிழா!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு நந்தவன சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவ திருவிழாக்கள் சுகாதார நடைமுறைப்படி நடைபெற்றுவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான குறித்த உற்சவம் தொடர்ந்து 9நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையுமென ஆலய தர்மகார்த்தா இரா.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

தற்போது தினமும் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் பகல் இரவு விசேட பூஜைகளுடன் திருவிழாக்கள் குறைந்த பக்தர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றுவருகிறது.

வழமைக்குமாறாக இம்முறை சமுத்திரத்தில் அல்லாது ஆலய தீர்த்தக்கிணற்றில் தீர்த்தமாட உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :