காரைதீவில் இலங்கைவங்கி ,தபாலகத்திற்கு மூடுவிழா! நால்வருக்கு கொரோனா: ஏனையோர் தனிமைப்படுத்தலில்.



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவிலுள்ள இலங்கைவங்கிக்கிளை மற்றும் பிரதான தபாலகம் என்பன கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளன என காரைதீவுப்பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டர்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.

இலங்கைவங்கிக்கிளையில் மூன்று ஊழியருக்கும், தபாலகத்தில் ஒரு ஊழியருக்குமாக மொத்தம் நால்வருக்கு கொ ரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நால்வரில் மூவர் காரைதீவைச்சேர்ந்தவர்கள். ஒருவர் அம்பாறையைச்சேர்ந்தவர். அனைவரும் கொவிட் இடைத்தங்கல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இவை இழுத்துமூடப்பட்டன. அங்கு பணியாற்றிய ஏனையோர் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ளனர். என வும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இதுவரை மாளிகைக்காடு மாவடிப்பள்ளி காரைதீவு அடங்கலான இக் காரைதீவு சுகாதாரப்பிரிவில் இதுவரை 307பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி 282பேர் குணமாகியுள்ளனர். இறுதியாக 6பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். தற்போது 19பேர் மாத்திரமே சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இதுவரை மாளிகைக்காடு மாவடிப்பள்ளி காரைதீவு அடங்கலான இச்சுகாதாரப்பிரிவில் 6பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :