65 வயதுடைய மூதாட்டியொருவர் வெட்டிக்கொலை!



ஏறாவூர் நிருபர் நாஸர்-
ட்டக்களப்பு- செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் 65 வயதுடைய மூதாட்டியொருவரை அவரது மகன் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மூதாட்டியின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மதுபோதையுடன் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மூன்று பிள்ளைகளின் தாயான பொன்னுத்துரை தவமணி என்பவரே கொலை செய்யப்பட்டவர்.
தாயின் வீட்டிற்கு வந்த மகன் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் சிறிய கத்தியினால் தாயின் கழுத்தை அறுத்துக்கொலைசெய்துவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
களுவாஞ்சிக்குடி மாவட்ட நீதிமன்ற நிதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான ஜீவராணி கருப்பையா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :