மட்டக்களப்பு- செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் 65 வயதுடைய மூதாட்டியொருவரை அவரது மகன் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மூதாட்டியின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மதுபோதையுடன் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மூன்று பிள்ளைகளின் தாயான பொன்னுத்துரை தவமணி என்பவரே கொலை செய்யப்பட்டவர்.
தாயின் வீட்டிற்கு வந்த மகன் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் சிறிய கத்தியினால் தாயின் கழுத்தை அறுத்துக்கொலைசெய்துவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
களுவாஞ்சிக்குடி மாவட்ட நீதிமன்ற நிதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான ஜீவராணி கருப்பையா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மூதாட்டியின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மதுபோதையுடன் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மூன்று பிள்ளைகளின் தாயான பொன்னுத்துரை தவமணி என்பவரே கொலை செய்யப்பட்டவர்.
தாயின் வீட்டிற்கு வந்த மகன் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்த பின்னர் சிறிய கத்தியினால் தாயின் கழுத்தை அறுத்துக்கொலைசெய்துவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
களுவாஞ்சிக்குடி மாவட்ட நீதிமன்ற நிதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான ஜீவராணி கருப்பையா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment