கிழக்கில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்க 40 மில்லியன் ஒதுக்கீடு



அஸ்லம் எஸ்.மௌலானா-
கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் சுமார் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார் என ஆளுனர் செயலகம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் சேதனப்பயளை உற்பத்தி ஊக்குவிப்பு நிதியாக தலா பத்து லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 08 உள்ளூராட்சி மன்றங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்கள், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 உள்ளூராட்சி மன்றங்களுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :