குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு நிரந்த நியமனம் வழங்கும் நிகழ்வு கந்தளாய் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன மண்டபத்தில் வியாழக்கிழமை (22) மாலை நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அலுவலகங்களில் பயிற்சியில் ஈடுபட்ட 45 பேருக்கு இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இவர்களை மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில அத்துக்கோரல,கந்தளாய் வலயக்கல்விப் பணிப்பாளர்,கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர்,மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களும் காலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்கள்.
0 comments :
Post a Comment