குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு நிரந்த நியமனம் வழங்கும் நிகழ்வு.



எப்.முபாரக்-
குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு நிரந்த நியமனம் வழங்கும் நிகழ்வு கந்தளாய் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன மண்டபத்தில் வியாழக்கிழமை (22) மாலை நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அலுவலகங்களில் பயிற்சியில் ஈடுபட்ட 45 பேருக்கு இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
இவர்களை மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கபில அத்துக்கோரல,கந்தளாய் வலயக்கல்விப் பணிப்பாளர்,கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர்,மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களும் காலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :