அட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா வனராஜா பகுதியில் பவுசர் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளனது.
நோர்வூட்டிலிருந்து தலவத்த பகுதிக்கு பால் ஏற்றிச்சென்ற பவுசர் வண்டியே 22/07 இரவு 11 மணியளவில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
9500 லீட்டர் பால் ஏற்றிச்சென்ற பவுசரின் சாரதிக்கு நித்திரை வந்ததாலே கட்டுப்பாட்டை மீறி வழுக்கி சென்று விபத்துக்குள்ளானதாகவும் சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என தொரிவித்த பொலிஸார் மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மை காணப்படுவதனால் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment