பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் நோய்களுக்கான பிரிவு சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனையின் நிர்வாகத்தின் கீழும், தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் வழிகாட்டலின் கீழும் இயங்கிவரும், பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் நோய்களுக்கான பிரிவு, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று (20) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய மேகநோயியல் வைத்திய நிபுணர் டாக்டர் கே.ஏ.சி.ஆர். விஜேசேகர மற்றும் கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் பிரிவின் மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.என்.எம். தில்ஷான் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணண் கலந்து கொண்டார் மேலும் விசேட அதிதியாக கிழக்கு மாகாண சமுக வைத்திய நிபுணர் டாக்டர் ஏ. அருள்குமரன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.வீ. அப்துல் வாஜித், பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம் மாஹிர், பிராந்திய தாய்-சேய் நலப் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம். பஸால், பிராந்திய தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் என். ரமேஷ், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். அல்-அமீன் றிஷாட், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே.ஷனூஸ் காரியப்பர்,உட்பட முக்கிய பிரமுகர்களும் கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் பிரிவின் ஊழியர்களும், தன்னார்வத் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :