அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளுக்கு முன்னாள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்



பைஷல் இஸ்மாயில் -
க்கரைப்பற்று தள வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் நேற்றுக்காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை வைத்தியசாலைகளுக்கு முன்னாள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது, கொவிட் 19 ஆட் கொல்லிக்கு முதலில் பலியாவது தாதியரா?, கொவிட் உடனான போரில் முன்னரங்கில் நிற்போருக்கு போதியளவு கையுறைகள் முகக்கவசங்களை தங்குதடையின்றி வழங்கு, கொவிட் தடுப்பூசி பராமரிப்பில் நோயாளியுடன் நெருங்கிப் பணியாற்றும் எமது குடும்பத்திற்கும் வழங்கு, நாம் நோயாளிகளுக்கான சேவையை தடையின்றியாற்ற போக்குவரத்து வசதிகளை செய்து கொடு, பொதுமக்களின் உயிராபத்தைக் குறைப்பதற்கான பராமரிப்பை கொடுக்க எமக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு என்று கோசமிட்டனர்.


மேலும், கொவிட் தடுப்பூசி ஏற்றாத சுகாதாரப் பணிக் குழுவினருக்கு உடனடியாக ஏற்று, சுமார் 5000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்படவில்லை இதனால் அடுத்துப் பலியாவோர் தாதியரா? , தடுப்பூசி ஏற்றாத தாதியருக்கு உடனே தடுப்பூசியேற்ற ஒழுங்கு செய், ஆபத்தைப்பொருட்படுத்தாது சேவையாற்றும் சுகாதாரப் பணிக் குழுவினருக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடு, கொவிட் விடுதிகளில் சேவையாற்றும் பணிக் குழுவினருக்கு உணவு வினியோக ஒழுங்கு செய், ஆபத்திற்கு முகங் கொடுக்கும் சுகாதாரப் பணிக் குழுவினரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி ஏற்ற ஒழுங்கு செய் என்ற பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :