கட்சியின் பொருளாளர் என்ற பொறுப்பு வாய்ந்த பதவியை வகித்து வந்த நண்பர் யூசுப் அதன் தலைவர் தோழர் திருமாவளவனின் வலது கரமாகச் செயற்பட்டவர்.
அன்னாரின் ஜனாஸாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினராலும், ஏனையோராலும் கட்சித் தலைமையகம் அம்பேத்கரில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டதோடு, நல்லடக்கம் சாலி கிராமத்தில் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டதையையும் அறிந்தேன்.
எனது கனிஷ்ட புத்திரியின் திருமண நிகழ்வில் தோழர் தொல்மாவளவன் சார்பிலும், தனிப்பட்ட விதத்திலும், மறைந்த நண்பர் முஹம்மத் யூசுப், கட்சியை சேர்ந்த சக நண்பர் ஆளுர் ஷா நவாஸ் சகிதம் நேரில் வந்து கலந்து சிறப்பித்ததையும் இந்த துக்ககரமான சந்தர்ப்பத்தில் நன்றியறிதலோடு நினைவு கூர்கின்றேன்.
அன்னாருக்கு அல்லாஹ் மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் சுவன வாழ்வை அருள்வதோடு, அவரது பிரிவினால் துயருற்றிக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் அளிப்பானாக.
0 comments :
Post a Comment