பல்கலைக்கழக சேவையில் 30 வருட பயணத்தை நிறைவு செய்த றிபாயிஸ் முகமது அவர்களுக்கு கௌரவிப்பு



ல்கலைக்கழக சேவையில் 30 வருடங்களைக் கடந்துவிட்டு ஓய்வு பெறும் சிரேஷ்ட பதவிநிலை முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ. றிபாயிஸ் முகமது அவர்களுக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக பணிக்கொடை மற்றும் ஊழியர் சங்க நலன்புரி நிதி வழங்கும் நிகழ்வு நேற்று (18) தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம். அகமட் முனாஸ் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

1995 நவம்பர் 25ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்தில் சேவையைத் தொடங்கிய இவர், பதிவாளர் அலுவலகம், உபவேந்தர் காரியாலயம், பிரயோக விஞ்ஞான பீடம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பான பணியாற்றியதோடு, மாணவர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆகிய அனைவருடனும் அன்போடு பழகிய பண்பால் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்திருந்தார்.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். எம். ஜுனைதீன் மற்றும் பதில் பதிவாளர் எம். ஐ. நௌபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில், பணிக்கொடை நிதி உபவேந்தர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும், பதில் பதிவாளர் அவர்களால் றிபாயிஸ் முகமது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

ஊழியர் சங்க நலன்புரி நிதியினை நலன்புரி நிதியத்தின் தலைவர்    வை. முபாரக், பொருளாளர் எம். எச். நசார், செயலாளர் எம். எம். ரம்சின் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

மேலும், ஊழியர் சங்கத் தலைவர் சி. எம். அஹமட் முனாஸ், நிர்வாகக் குழு அங்கத்தவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு, ஓய்வு பெறும் சகோதரர் றிபாயிஸ் முகமது அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இவரது ஓய்விற்குப் பின் வாழ்க்கை குடும்பத்துடன் அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் அமைய இறைவனைப் பிரார்த்திப்பதாக பொதுச் செயலாளர் எம். எம். முகமது காமில் உள்ளிட்ட சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களும் சக ஊழியர்களும் கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

 













 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :