தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று 2025.08.20 ஆம் திகதி பல்கலைக்கழக முற்றலில் அமைதிவழி வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளதால் பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்க நிலையை அடைந்திருந்தன.
ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம். முனாஸ் தலைமையில் 20.08.2025ஆம் திகதி புதன்கிழமை முழுநாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் பேரணியிலும் ஈடுபட்ட ஊழியர்கள். பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஒலுவில் பிரதான வீதிவரை ஊர்வலமாகச் சென்றனர்.
நீண்டகால சம்பள முரண்பாடுகளை சீர்செய்ய விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனம் செய்யப்படுவதை வெளிக்கொணருமுகமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் இந்த முழுநாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.
பொதுச் செயலாளர் எம்.எம். முகம்மது காமில் உள்ளிட்ட ஊழியர் சங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் ஊழியர்களும் பங்குகொன்டனர்.

0 comments :
Post a Comment