பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தலைமையில் பிரதேச துரித அபிவிருத்திக்கான கலந்துரையாடல்!



பிரதேச அபிவிருத்தியை விரைவாக முன்னெடுக்க மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவதே நோக்கமாகக் கொண்ட முக்கிய கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் கௌரவ அபூ ஆதம்பாவா தலைமையில், சமூக செயற்பாட்டாளர் எஸார் மீராசாஹிப் அவர்களது இல்லத்தில் நேற்று மாலை    வெற்றிகரமாக நடைபெற்றது.

சமூக செயற்பாட்டாளர் எஸார் மீராசாஹிப் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ பர்ஹான் மொஹமட், பொறியியலாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, பிரதேச அபிவிருத்தியை விரைவாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கருத்துக்களை பரிமாறினர். கலந்துரையாடல் நேரத்தில் பங்கேற்பாளர்கள் தங்களது அனுபவங்கள் மற்றும் பரிந்துரைகளை பகிர்ந்தனர்.

கலந்துரையாடலின் முக்கிய முடிவுகளில் ஒன்று, பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகளை ஒருங்கிணைத்து, விரைவில் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் புத்திஜீவிகள், துறைசார் வல்லுனர்கள், தொழிலதிபர்கள், ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரின் பங்களிப்புடன் ஒரு மகாசபையை அமைக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இந்த மகாசபை மூலம் பிரதேச அபிவிருத்திக்கான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும்.

கூட்டத்தின் முடிவில், கௌரவ அபூ ஆதம்பாவா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் மற்றும் பிரதேச அபிவிருத்தி முன்னேற்றம் குறித்து அனைத்து பங்கேற்பாளர்களும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்தனர். அவரின் தலைமையில், பொதுமக்களின் ஆதரவு மற்றும் வல்லுனர்கள் பங்களிப்பு மூலம் பிரதேச அபிவிருத்தியில் முக்கிய முன்னேற்றங்களை காண்பது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :