இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் சூழலில் தமிழக அரசு கடந்த 20ந் தேதி புதிய கட்டுபாடுகளை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழக அரசின் அனைத்து அறிவிப்பிற்கும் தமிழக முஸ்லிம்கள் முழுமையாக கட்டுப்பட்டு வருகின்றனர்,
குறிப்பாக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு பள்ளிவாசல்களில் நடத்தப்படுகின்ற இரவு தொழுகையின் நேரத்தை குறைத்து இரவு 10 மணிக்குள் தொழுகையை நடத்துகின்றனர். மேலும் பள்ளிவாசல்களுக்குள் வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும், தனி மனித இடைவெளியுடன் நின்று வழிபட வேண்டும், பள்ளிவாசல்களுக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை என முழுமையான கட்டுப்பாடு வழிகாட்டுதல்களை பின்பற்றி தங்களின் வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
இச்சூழலில் கொரோனா கட்டுப்பாடு என கூறி வழிபாட்டுதலங்களில் பொதுமக்களின் வழிபாட்டிற்கான அனுமதியை தமிழக அரசு முழுமையாக மறுத்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. குறிப்பாக ரமலான் மாதம் என்பது முஸ்லிம்களுக்கு புனித மாதம் என்பதால் இம்மாதத்திற்கென சிறப்பு வழிபாடுகள் இருக்கின்றது. கடந்த வருடம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக அந்த வழிபாடுகளில் ஈடுபட இயலாமல் போயிருந்த நிலையில், இந்த வருடமும் அதே நிலை ஏற்படுத்துவது வருத்தமளிக்கின்றது.
எனவே, முஸ்லிம்களின் உணர்வை கருத்தில் கொண்டு வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும். மேலும் தொழுகைக்கு வருபவர்களுக்கு கடைப்பிடிக்கப்பட்ட காய்ச்சல் பரிசோதனை, தனி மனித இடைவெளியை கடைபிடித்தல்
போன்ற வழிகாட்டுதலுடன் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment