கிழக்குமாகாண குறும்பட பயிற்சிப்பட்டறை



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட குறுந்திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான முதலாவது பயிற்சிப்பட்டறை நேற்று(31)புதன்கிழமை காரைதீவில் ஆரம்பமானது.

காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் மாகாணப்பணிப்பாளர் சரா.நவநீதன் தலைமையில் ஆரம்பமான இப்பட்டறை இன்று(01) நிறைவடையவிருக்கிறது.
அங்குரார்ப்பணவிழாவிற்கு பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேச செலாளர் சிவ.ஜெகராஜன் கௌரவஅதிதியாக தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பிரபல எழுத்தாளர் உமாவரதராஜன் பட்டறையின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.வளவாளர் ஞானதாஸ் முதலாவது விரிவுரை நிகழ்த்தினார்.

குறும்பட இயக்குனர்கள் நடிகர்கள் என சுமார் 50பேர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :