மீனாட்சிஅம்மனின் மகா கும்பாபிசேகம் தொடர்பில் கலந்துரையாடல்!



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஆலயத்தில் நடைபெற்றது.
ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆலயநிருவாகசபையினர் ஆலோசகர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

பிரபல இந்துகுருவான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் தலைமையிலான குழுவினர் கும்பாபிசேகத்தை செய்வதுஎன்றும் சித்திரைமாத இறுதிப்பகுதியில் இதனை நடாத்துவதென்றும் முடிவானது.

எதற்கும் அம்பாறை மாவட்டத்தின் இந்துக்கள்வாழ்கின்ற சகலகிராமங்களைச்சேர்ந்த பிரமுகர்களையும் அழைத்து மிகவிரைவில் பொதுக்கூட்டமொன்றை நடாத்துவதென்றும் அதில் மகாகும்பாபிசேகக்குழு மற்றும் உபகுழுக்களைத் தெரிவுசெய்வதென்றும் முடிவானது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :