நாவிதன்வெளிஅன்னமலை மகாவித்தியாலயத்தில் வித்தியாரம்பம்



காரைதீவு சகா-
நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் 1ஆம்ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்பவிழா நேற்று அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதமஅதிதியாக பாடசாலை மேம்பாட்டுநிகழ்ச்சித்திட்ட இணைப்பாளரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றி சிறப்பித்தார்.

கௌரவஅதிதியாக இலங்கைவங்கியின் நாவிதன்வெளிக்கிளை முகாமையாளர் கே.சசிதரன் கலந்துசிறப்பித்தார்.

முன்னதாக புதியமாணவர்கள் பழையமாணவர்களால் மாலைசூட்டப்பட்டு மாஸ்க் அணிவிக்கப்பட்டு பேஸ்ஷீல்ட் அணிவிக்கப்பட்டு உண்டியல் வழங்கப்பட்டு வர்ணகுடையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
விவசாய இராஜாங்க அமைச்சின் திட்டத்திற்கமைய 1ஆம் வருட மாணவர்க்கு மரக்கன்று விநியோகம் செய்யப்பட்டது.


பின்னர் பாடசாலையின்ஒன்றுகூடல் மண்டபத்தில் சுகாதாரநடைமுறைப்படி வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றது. அவ்வமயம் தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 07மாணவர்கள்; பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :