நிலாவெளி கோபாலபுர பிரதான வீதியில் விபத்து,ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்



எப்.முபாரக்-
திருகோணமலை நிலாவெளி கோபாலபுர வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானா பஸ்சொன்றும்,மோட்டார் சைக்கில் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோபாலபுரம் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புல்மோட்டையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நபர் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரே வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :