திருகோணமலை நிலாவெளி கோபாலபுர வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானா பஸ்சொன்றும்,மோட்டார் சைக்கில் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோபாலபுரம் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புல்மோட்டையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நபர் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரே வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment