ஊரடங்கு இல்லாத போதும் வெறிச்சோடிக் காணப்படும் ஓட்டமாவடி



எச்.எம்.எம்.பர்ஸான்-
கொரோனா தாக்கம் காரணமாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசம் இன்று (6) வெறிச்சோடிக் காணப்பட்டது.

குறித்த பகுதியில் தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் பீ.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகளின் படி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பகுதியில் ஊரடங்குச் சட்டம் இல்லாத போதும் குறித்த பிரதேசம் சனநடமாட்டமின்றி வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குறித்த பகுதியில் பரவி வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் பெரிதும் அச்ச நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வாழைச்சேனை பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :