கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் 6 வது நாளாகவும் தொடரும் தனிமைப்படுத்தல்



எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை மாநகர சபை பிரதேசத்தில் 6 வது நாளாகவும் தொடரும் தனிமைப்படுத்தல் நிலைமையினால் குறித்த 11 கிராம சேகர் பிரிவு பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த திங்கட்கிழமை (28) இலிருந்து 6 வது நாளாகவும் கல்முனை செயிலான் வீதி தொடக்கம் வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தொடர்ந்தும் இவ்வாறு இன்றும் குறித்த பிரதேசம் முடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த இப்பிரதேசத்தில் உள்ள பொதுப்போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இங்குள்ள பொதுச் சந்தை, கடைகள், பள்ளிவாயில்கள், பொது நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதுடன் உள்ளுர் வீதிகளும் வீதித்தடைகள் போடப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்ககையில் ஈடுபடுவதனால் மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

மேலும் இது விடயமாக சுகாதாரத்துறையினர் குறிப்பிடும்போது, தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்கும் நிலை காணப்படுமாக இருந்தால் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் அனுதியோடு கல்முனை மாநகரத்தின் சகல பகுதிகளையும் முடக்கும் நிலை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கல்முனை கொவிட் -19 கட்டுப்பாட்டு செயலணியினால் முக்கிய அறிவித்தல் ஒன்றும் இன்று (02) விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்முனை பகுதியில் தீவிரமாக பரவி வரும் கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் முகமாக இவ் ஊரின் சகல பள்ளிவாசல்களின் நிர்வாகிகள்,உலமாக்கள்,மக்கள் பிரதிநிதிகள்,வர்த்தக சங்கங்களின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புகள் மற்றும் நிறுவணங்களின் பிரதிநிதிகள் , சுகாதாரத் துறையின் பிரதிநிதிகள் , கல்விமாண்கள் , முக்கியஸ்த்தர்கள் ஒன்றிணைந்து கல்முனை கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி அமைக்கப்பட்டுள்ளது .

இச்செயலணியினால் இன்று 02.01.2021 சனிக்கிழமை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்டுள்ள கல்முனை செயிலான் வீதி தொடக்கம் இதுவரை முடக்கப்படாதுள்ள .சாஹிறா கல்லூரி வீதி வரையிலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் தினமும் மறு அறிவித்தல் வரை மாலை 6.00 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மூடப்படல் வேண்டும்.

இப்பிரதேசத்தில் தினமும் மாலை 6.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடுவது முற்றாக தடை செய்யப்படுகின்றது . அவசர வைத்தியத் தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளிவர அனுமதிக்கப்படுவார்கள்.

இப்பிரதேசத்தில் பிற்பகல் 6.00 மணிக்குப் பின்னர் வைத்தியசாலைகளும் பாமஸிகளும் மட்டுமே திறக்கப்பட அனுமதியளிக்கப்படும் .
எல்லா நேரங்களிலும் சுகாதாரத் துறையினரினால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் கட்டாயமாக பின்பற்றப்படல் வேண்டும்
இவ்வறிவித்தலை மீறி செயற்படுவோருக்கு பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரத்துறையினரின் பங்களிப்புடன் உடனடியாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் மூடப்பட்டிருக்கும் செயிலான் வீதி வரையிலான பகுதிகளை விரைவாக மீட்பதற்காகவும், ஏனைய பகுதிகள் லொக் டவுன் செய்யப்படாமல் பாதுகாப்பதற்காகவுமே என்பதனால் இந்த அவசர நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :