கொவிட்19 தொற்றினை தடுப்பதற்கான விழிப்புணர்வூட்டல்.



எப்.முபாரக்-
கொவிட்19 தொற்றினை தடுப்பதற்கான விழிப்புணர்வூட்டல் திட்டத்தின் ஒரு அங்கமாக திருகோணமலை அனுராதபுர சந்தியில் விழிப்புணர்வூட்டல் பதாகைகளையும் சுவரொட்டிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கும் நிகழ்வொன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளைத் தொண்டர்களினால் இன்று(4) மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை மாவட்ட கிளை நிறைவேற்று அதிகாரி திரு. வ. தர்மபவன் ஆரம்பித்து வைத்தார்.
இச் செயற்திட்டம் திருகோணமலை மாவட்டத்தின் சகல பிரிவுகளுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் அதற்குப் பொதுமக்களும் இந்நோயின் தாக்கங்களை உணர்ந்து தமது ஒத்துழைப்பினையும் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இச் செயற்பாட்டில் இ. செ. சி. சங்கத் தொண்டர்களுடன் திருகோணமலைக் கிளையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியும் தற்போதைய பதில் செயலாளருமான டொக்டர் என். ரவிச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :