கல்முனை, பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொற்று உறுதி



பாறுக் ஷிஹான்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் இன்று (4) 97 Rapid Antigen Test பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்குத் தேவையான பொருட்களை கல்முனையிலிருந்தே கொள்வனவு செய்வதால் கடை உரிமையாளர்களை இலக்காகக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனைகளின் முடிவாக 4 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நால்வரும் மத்திய முகாம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நால்வருடன் நாவிதன்வெளி, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ள COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நால்வரில் ஒருவர் கல்முனை, பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :