விபத்துக்குள்ளான விமானம் "சைனா நெஷனல் ஏரோ " கம்பனி தயாரிப்பு!

J.f.காமிலா பேகம்-

திருகோணமலை – கந்தளாய், சூரியபுற பிரதேசத்தில் நேற்று விபத்துக்கு உள்ளாகிய பி.ரி-6 ரக விமானத்தின் விசாரணைகளுக்காக சீனாவை நாடவிருப்பதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

விமானப்படை ஊடகப் பேச்சாளரான குரூப் கப்டன் துசாந்த விஜேசிங்க இதனைத் தெரிவித்தார்.

குறித்த விமானம் சீனாவைச் சேர்ந்த சைனா நெசனல் ஏரோ என்கிற விமான உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டது என்றும் , அந்த வகையில் அந்த நிறுவனப் பிரதிநிதிகளை இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து பேச்சு நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விமானப்படை சார்பாக சீனாவின் உதவியை நாட நினைக்கவில்லை. இருந்த போதிலும், இதுகுறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசிற்கு அமையவே அந்த முடிவை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

விசேடமாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் உதவியை இதற்காக நாடியிருப்பதாக விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை சீனக்குடா விமானப்படைத் தளத்திலிருந்து நேற்றுப் பகல் பயணத்தை ஆரம்பித்த பி.ரி-6 விமானம், வெறும் 15 நிமிடங்களில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியதில் அதன் விமானி அமரகோன் என்ற 23 வயது இளைஞன் உயிரிழந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :