பொகவந்தலா பகுதியில் மேலும் எட்டு பேருக்கு தொற்று - இதுவரை 55 பேருக்கு தொற்று


நோட்டன் பிரிட்ஜ்  எம்.கிருஸ்ணா-

பொகவந்தலா பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டடுள்ளதுடன் இதுவரையில் 55 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 23 ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை 28 மாலை கிடைக்கப்பெற்றதிலே கொழும்பிலிருந்து வந்தவர்கள் மற்றும் வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் என 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையின் பணி புரியும் இன்வெறி,போற்றி தோட்டத்தை சேர்ந்த இருவரும், ஏற்கனவே தொற்றுக்குள்ளான வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் இன்ஜஸ்ரீ தோட்டம் பீரட்பிரிவைச் சேர்ந்த பெண்ணின் தாய், சகோதரன் மற்றும் சகோதரி என மூவரும், கேர்கசோல்ட் நடுப்பிரிவை சேர்ந்த இருவர்,மற்றும் என்பீல்ட் தோட்டத்தில் ஒருவருமாக எட்டு பேருக்கே தொற்று உறுதியானது

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் ஒட்ரி தோட்டத்தைச் சேர்ந்த
ஒருவருக்கும், மற்றும் இன்வெரி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களை சுகாதாரப் பாதுகாப்புடன் சுயதனிமை மத்திய
நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இதுவரையில் பொகவந்தலா சுகாாதார வைத்திய அதிகாரி காராயாலயம் பகுதியில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :