இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக மூன்று ஜனாதிபதிகள் ஆளும் கட்சியின் முதல் வரிசையில்

J.f.காமிலா பேகம்-

லங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக மூன்று ஜனாதிபதிகள், ஆளும் கட்சியின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தமை விசேட அம்சமாகும்.

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று நடைபெற்ற போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சபைக்கு பிரசன்னமாகியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு அருகிலுள்ள ஆசனத்திலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமர்ந்திருந்தார்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்வரிசையிலுள்ள தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்ததுடன், மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.

2019ஆம் ஆண்டு முதல் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.

இவ்வாறான நிலையில், மூன்று ஜனாதிபதிகளும் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் கலந்துக்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :