கொழும்பு துறைமுக ஊழியர்கள் பலருக்கு தொற்று உறுதி



J.f.காமிலா பேகம்-

கொழும்பு துறைமுகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 04 ஊழியர்கள் கொழும்பு துறைமுகத்தில் இனங்காணப்பட்டிருந்த நிலையில் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களில் சிலரும் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு – மத்துகம வழியில் சேவையில் ஈடுபட்டுவந்த தனியார் சொகுசு பஸ் சாரதி, நடத்துநருக்கும் கொரோனா தொற்று அண்மையில் உறுதிசெய்யப்பட்ட நிலையில் அந்த பஸ்ஸில் பயணித்த மேலும் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பஸ்ஸில் பயணித்து தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களிடம் இருந்து கொழும்பு துறைமுக ஊழியர்களுக்கு வைரஸ் பரவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :