வௌிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப் பட்டுள்ளது!

வௌி
நாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வௌிநாட்டுலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்துவதற்கான இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் இலங்கையர் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்

இந்நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 57,000 பேரிற்கு அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்ப கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :