தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலனுடன் செயற்பட்டு வருகின்றனர் - இரா.சாணக்கியன்

மிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றமை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'ஏனைய மாவட்டங்களில் இரண்டிற்கும் மேற்பட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.

எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் தனி நபர் ஒருவரின் சுயநலம் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறிப்பாக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களின் போது தீர்க்கப்பட வேண்டிய குடிநீர், தொல்பொருள், விவசாயம் உள்ளடங்கலாக பல பிரச்சனைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

எனவே
தான் வந்துதான் அந்த அபிவிருத்திக் குழு கூட்டத்தினை நடாத்த வேண்டும் என சுயநலத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் செயற்படுகின்றனர்.

இதன்காரணமாக மட்டக்களப்பு மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :