எப்.முபாரக்-
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் வயது சிறுமியொருவரை திருமணம் செய்த இளைஞயொருவரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(3) உத்தரவிட்டார்.
புதூர்,கதிரவெளி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞர் பதிநான்கு வயதுடைய சிறுமியொருவரை காதலித்து ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இளம் வயது திருமணம் தொடர்பாக சேருநுவர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் (வாசஸ்தலம்) முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வேண்டி மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸர் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment