சர்ஜுன் லாபீர்-
மருதமுனை ஹியுமன்லின்க் வளப்படுத்தல் நிலையத்தின்
சுகாதார பராமரிப்பு நிலையம் திறப்பு விழாவும்,ஹியுமன்லின்க் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று(3) பணிப்பாளர் ஏ.கமறுத்தீன் தலைமையில் ஹியுமன்லின்க் வளப்படுத்தல் நிலையத்தில் நடைபெற்றது.
விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் ஏனையவர்களின் நலன்பேணுகின்ற நோக்கில்
தொழில்சார் சிகிச்சை,பேச்சு மற்றும் மொழிவள சிகிச்சை,இயன் மருத்துவம்,உளவள சிகிச்சை என பலவகையான சிகிச்சைகள் இந்த நிலையத்தின் ஊடாக வழங்கப்பட இருக்கின்றன.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம் லத்தீப் கலந்து கொண்டு சுகாதார பராமரிப்பு நிலையத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், விசேட இயன் மருத்துவ நிபுணர் எம்.ஏ.சி.எம் பறக்கத்துல்லாஹ்,கல்வியாளர்கள் பெற்றோர்கள்,விசேட தேவையுடைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment