J.f.காமிலா பேகம்-
நாடளாவிய ரீதியில் 8000 பேர் சுய தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுசுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவர்களில் மினுவங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களில் 6000 பேர் உள்ளடங்கியிருப்பதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான மஹேந்திர பாரசூரிய குறிப்பிட்டார்.
இதேவேளை மினுவங்கொடை கொரோனா கொத்தனியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1053ஆக அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4488ஆகவும் உயர்வடைந்துள்ளது.
0 comments :
Post a Comment