J.f.காமிலா பேகம்-
கம்பஹா மாவட்டத்தின் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.
இதன்படி, இதற்காக, 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment