பாவற்குளத்தில் ஒன்றரை கோடி செலவில் புதிய இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம்



ன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளுக்கமைய குவைத் நாட்டின் நிதியுதவியுடன் அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் அமைப்பு வவுனியா பாவற்குளம் அல் அமீன் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் (1.5 கோடி) செலவில் புதிய இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான
அடிக்கல் நாட்டு வைபவம் பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் எஸ்.புகாரி தலைமையில் நேற்று (2) இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.இராதா கிருஷ்ணன்,அல் ஹிமா இஸ்லாமிய சேவைகள் நிறுவன பணிப்பாளர் எம்.எம்.நூறுல்லாஹ் (நளீமி) உள்ளிட்ட பொது மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :