தமிழரின் கழுத்தை அறுப்பதாக கூறிய இராணுவ அதிகாரிக்கு ஹட்டனில் வழக்கு

J.f.காமிலா பேகம்-


ராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

ஹட்டன் கொமர்ஷல் பிரதேசத்தில் தனியார் காணியை உரிமையாளரின் அனுமதியின்றி, தனிமைப்படுத்தும் முகாமாக இராணுவம் பாவித்தமைக்கு எதிராக இந்த வழக்கு இடப்பட்டுள்ளது.

வழக்கு மீதான விசாரணை ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்திரேட் நீதவான் ட்ரோக்ஸி முன்பான இன்று நடந்தது.

இராணுவம் தரப்பில் ஆஜராகிய இராணுவத்தின் சட்டப்பிரிவு சட்டத்தரணி மற்றும் அரச சட்டத்தரணி ஜயகித் மாதுரத்ன ஆகியோர், இராணுவத்திற்கு எதிரான வழக்கினை விசாரிக்க, மேற்படி இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று வாதிட்டனர்.

தனியார் காணி உரிமையாளர் சார்பாக சட்டத்தரணி மைத்ரி குணரத்ன பிரசன்னமாகினார்.

எதிர்தரப்பு வாதத்தை கவனத்திற்கொண்ட நீதிமன்றம், ஆட்சேபனையை எழுத்து வடிவில், வருகிற 29ம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட அதேவேளை, வழக்கினை அன்றைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :