பலஸ்தீனம் விவகாரத்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - இஸ்ரேல் இடையே 50 வருடத்துக்கும் மேலாக கடும் பகை இருந்து வந்தது. இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உட்பட எந்த உறவும் இல்லாமல் இருந்து வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஏற்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையேயான பகையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார்.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் எதிர் வரும் 15ம் திகதி வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
இந்நிலையில், நோர்வே நாட்டின் பாரளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைபிரிங் ஜெட்டே, அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த முயற்சியை பாராட்டி, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும்படி நேற்று முன்தினம் பரிந்துரை செய்தார்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கெய்லி மெக்னானி ( Kayleigh McEnany ) நேற்று கூறுகையில்:-
இஸ்ரேல் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமாதான ஒப்பந்தம், வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். இதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பது தகுதியான ஒன்றுதான்,’’ என்றார்.
0 comments :
Post a Comment