இலங்கையை சுற்றி பச்சை நிறமாக மாறிய கடல்-ஆபத்தின் அறிகுறியா?


ஜே.எப்.காமிலா பேகம்-


லங்கையின் பல்வேறு கடலோரப் பகுதிகளிலும் கடல்நீர் பச்சை நிறமாக மாறியிருப்பது பல்வேறு அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் கொழும்புக்கு அண்மித்த பகுதியான மொரட்டுவ அங்குலான பிரதேச கடற்பரப்பில் கடல்நீர் இவ்வாறு பச்சை நிறமாக தோற்றமளித்துள்ளது.

அங்கு பிடிக்கப்பட்ட மீன்களும் மஞ்சை மற்றும் பச்சை நிற தோற்றமுடையதாக இருந்துள்ளதுடன் மீனவர்களின் வலைகளும், படகுகளும் பச்சை நிறம் கொண்ட இரசாயனம் பூசப்பட்டதாக காட்சியளித்திருக்கின்றன.

இதுகுறித்து நாரா திணைக்களத்திடம் கடந்த 31ஆம் திகதி முறையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே காலி, களுத்துறை, பயாகல, பேருவளை, சிலாபம் மற்றும் மோதர ஆகிய கடலோரப் பகுதிகளிலும் இவ்வாறு பச்சை நிறமாக கடல்நீர் மாற்றமடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நாரா நிறுவனம் தொடர்ந்தும் ஆய்வுகளை நடத்திவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :