இலங்கையில் முதல்தடவையாக கொரோனா பெண்ணுக்கு கிடைத்த குழந்தை!


லங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்த முதல் சம்பவம் நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் அண்மையில் துபாயில் இருந்து நாடு திரும்பிய பெண்ணே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார்.
குறித்த பெண் கடந்த மாதம் 10ம் திகதி நாடு திரும்பிய நிலையில் கந்தக்காடு தனிமைப்படுத்தும் முகாமில் வைத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் பிரசவ வலி வந்ததினால் அவர் கிழக்கு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரசவத்திற்கு மருத்துவர்கள், பணிக்குழாம் என 35 பேர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :