அக்கரைபற்று பஸ்ஸுக்கு கல்லெறி! சாரதிக்கு காயம்

ஜே.எப்.காமிலா பேகம்-

க்கரைபற்று திருகோணமலை பஸ்ஸுக்கு கல் எறியப்பட்டதால் சாரதி காயப்பட்டார்.

இந்த சம்பவம் இன்று காலை 6.10 அளவில் வாழைச்சேனை வட்டவானில் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 3மணிக்கு திருகோணமலையிலிருந்து அக்கரைபற்று நோக்கி பயணித்த இ.போ.ச.பஸ் வண்டிக்கே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுற்குற்பட்ட வட்டவான் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல் காரணமாக சாரதி காயப்பட்டதால், பயணிகள் இறக்கப்பட்டு, பஸ் பயணம் இடைநிறுத்தப்பட்டது.

இந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணை தொடர்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :