தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் வியாபாரச் சந்தையும் கண்காட்சியும்..


எப்.முபாரக்-

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று (19) வியாபாரச்சந்தையும் கண்காட்சியும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து மேற்கொள்ளப்படும் உற்பத்திப்பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு இதன் மூலம் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு கிட்டுகின்றது.

பிரதேச மட்டத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களது தொழில் முயற்சிகளை மேலும் வலுப்படுத்துமாறும் அவர்களது உற்பத்திப்பொருட்களை பிரதேச செயலக அடிப்படையில் மேற்கொள்ள தேவையான பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன கேட்டுக்கொண்டதற்கிணங்க இச்செயற்றிட்டம் பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தப்பட்டு வருவதாக இதன்போது மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் என்.பிரளாநவன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,பிரதேச தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :