இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக கடத்திவரப்பட்ட 800 கிலோ கிரேம் மஞ்சள் கட்டிகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுரைச்சோலைக்கும், மன்னார் வங்காலைக்கும் இடப்பட்ட கடற்பரப்பில் இரண்டு படகுகளை சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு கடற்படையினர் சோதனை செய்தனர்.
இதில் 14 மூடைகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில் சுமார் 700 கிலோகிராம் மஞ்சள் கட்டிகள் இருந்துள்ளன.
சந்தேக நபர்களிடம் செய்த விசாரணையில் மேலும் 107 கிலோ கிரேம் நிறையுள்ள மஞ்சள் கட்டிகள் மூடைகளாக வங்காலை கடற்கரையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சின்னப்பாடு மற்றும் யாழ்ப்பாணம் சுங்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment