எஸ்.அஷ்ரப்கான்-
பிரபல புத்தக நிறுவனமான கொடகே நிறுவனம் வருடாவருடம் வழங்கிவரும் இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர்
விருதுக்கு இம்முறை மூன்று பேர் சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் மொழிகளுக்கான இலக்கிய விருதுகளை - 2020 ம் வருடத்திற்கென பெறவிருக்கிறார்கள்.
கொடகே தேசிய சாகித்திய விழாவில் தமிழுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை நமது நிந்தவூரின் இலக்கிய முதுசம்,பிரபல நாடக ஆசிரியர், கவிஞர்,
சிறுகதைஆசிரியர்,நாட்டுப்புற பாடல்களின் ஆய்வாளர்,
உருவகக்கதை ஆசிரியர்,
தமிழ்மாமணி, கலாபூஷணம், தாஜுல் அதீப், சட்டத்தரணி,சத்திய மொழிபெயர்ப்பாளர் அல்ஹாஜ்.எஸ்.முத்துமீரான் அவர்கள் பெறவிருப்பதானது நிந்தவூர் மண்ணுக்கு பெருமை சேர்ப்பதாகும்.
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின்ஆசிரியரான எஸ்.முத்துமீரான் அவர்களுக்கு ஏற்கெனவே இதுபோன்ற மற்றுமொரு வாழ்நாள் சாதனையாளர் விருது1984ம் வருடம் தென்னிந்தியா கும்பகோணத்தில் நடைபெற்ற அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய எட்டாவது மாநாட்டில் முஸ்லிம் நாட்டார் இலக்கியப் பணிகளுக்காக வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விழாவில் முத்துமீரான் அவர்களோடு பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு மற்றும் பேராசிரியர் சுனந்த மஹேந்திர ஆகிய இலக்கியவாதிகளும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளைப் பெறவிருக்கின்றனர்.
இவ்விழா எதிர்வரும் 10.09.2020 ந்திகதி பி.ப.3.00மணிக்கு கொழும்பிலுள்ள இலங்கைமன்றக் கல்லூரியின் கேட்போர்கூடத்தில நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment