கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைக்கு நிரந்தரமாக வைத்திய நிபுனர்களை நியமிப்பது சம்மந்தமான கலந்துரையாடல்

எப்.முபாரக்-


திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(17) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிற்கும் பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் எஸ்.சிறிதரனுக்குமிடையிலான சந்திப்பு பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தில் நடை
பெற்றதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்தார்.

இதன் போது இம்மாவட்டத்தில் நீண்ட காலமாக மூதூர் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளுக்கு நிரந்தரமான வைத்தியர்கள் நியமிக்கப்படாமை குறித்து பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தியதாகவும்,கூடிய விரைவில் அமைச்சருடன் கலந்துரையாடி வைத்தியர்களை நியமிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :